Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீட்சா, மருந்துகளை விநியோகிக்கும் சீன டிரோன்கள் மூலம் ஜம்முவில் தாக்குதல் நடத்திய பாக்.பயங்கரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீட்சா மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் சீனாவின் டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலமே ஜம்மு விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    IAF மீது China-வின் Pizza Delivery Drones-களை ஏவியதா Pak? | Oneindia Tamil

    பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாசவேலைகளை செய்து வருகிறது பாகிஸ்தான். இப்போது புதிய பாணியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது பாகிஸ்தான்.

    டிரோன்களில் வெடிபொருட்கள்- ஆயுதங்கள்

    டிரோன்களில் வெடிபொருட்கள்- ஆயுதங்கள்


    கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் ஏ.கே.47 ரக ரக துப்பாக்கிகள், வெடிபொருட்களை டிரோன்கள் மூலம் வீசி ஒத்திகை பார்த்தனர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். சில டிரோன்களை நமது பாதுகாப்பு படையினர் சுட்டும் வீழ்த்தி இருக்கின்றனர்.

    விமான படை தளம் மீது தாக்குதல்

    விமான படை தளம் மீது தாக்குதல்


    இந்த நிலையில்தான் ஜம்முகவில் ஞாயிற்றுக்கிழமையன்று அடுத்தடுத்து 5 நிமிட இடைவெளியில் விமானப் படை தளம் மீது குறைவான சக்தி கொண்ட வெடிகுண்டுகளை டிரோன்கள் மூலம் வீசி இருக்கின்றனர் பயங்கரவாதிகள். இந்த தாக்குதலில் 2 விமானப் படை வீரர்கள் லேசான காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இலக்கு விமானப் படை ஹெலிகாப்டர்க்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    விசாரணை

    விசாரணை

    தற்போது ஜம்மு விமானப் படை தளம் மீதான தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இதனிடையே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் சீனாவில் இருந்து ஏராளமான ஆளில்லா குட்டி விமானங்களான டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் வாங்கி குவித்திருக்கிறது.

    சீனா டிரோன்கள்

    சீனா டிரோன்கள்

    சீனாவில் பீட்சா, மருந்துகளை விநியோகிக்கவே இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய டிரோன்களை வாங்கிய பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுக்கு வெடிபொருட்கள், ஆயுதங்கள் சப்ளை செய்ய கொடுத்திருக்கிறது.

    தொடர் தாக்குதல்களுக்கு சதி?

    தொடர் தாக்குதல்களுக்கு சதி?

    அத்தகைய டிரோன்கள்தான் ஜம்மு விமான படை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை ஒரு ஒத்திகை போல பார்த்திருப்பதாகவும் நாட்டின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நிலைகள் மீது இத்தகைய தாக்குதல்களை அடுத்தடுத்து நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+