பஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்!
Recommended Video
டெல்லி: பஞ்சாப் பகுதிக்குள் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பறக்கவிட்டதால் எல்லையில் பாதுகாப்பு படையினர் கூடுதல் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி ஊடுருவல் போக்கில் பாகிஸ்தான் புதிய பாணியை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா விமானங்களை அனுப்பி அதில் இருந்து ஆயுதங்களை வீசி வருகிறது.

இந்த புதிய பாணிக்கு தக்க பதிலடி தரப்படும் என பாதுகாப்பு தரப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுத சப்ளை செய்திருக்கிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் கடந்த செப்டம்பர் 9ந்- தேதி முதல் 16-ந் தேதி வரை 8 முறை பஞ்சாப் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டு காலிஸ்தான் ஜிந்தாபாத் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்திருக்கிறது. தற்போது நேற்று இரவு 10 மணி முதல் 10.40 மணிக்குள் மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடனான ஆளில்லா விமானத்தை பஞ்சாப் பகுதிக்குள் பறக்கவிட்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் இந்த ஆளில்லா ஆயுத விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். இதனால் எல்லைகளில் தீவிர உஷார் நிலையில் ராணுவத்தினர் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 24-ந் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து சோழா சாகிப் என்ற கிராமத்தில் ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications