வழக்கமான ப்ளூ பிரிண்ட்! பாக். காலங்காலமாக இந்தியாவில் இதைத்தான் செய்கிறது! இப்போது எப்படி நம்புவது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் காலங்காலமாக பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஊக்குவித்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் உதவியுடன் இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை இந்த செய்தி விவரிக்கிறது.

1993லிருந்து இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இதன் பின்னர்தான் இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகமாகின.

pakistan india Pakistan

1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பியது. மொத்தம் 12 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் வெடித்தன. 250க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை நடத்தியது தாவூத் இப்ராஹிம் கும்பல்தான். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்னர் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து 2001 நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது. லக்ஷர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை தாக்கி 10 பேரை கொன்றனர். இதன் விளைவாக இந்தியா-பாகிஸ்தான் படைகளுக்கு இடையே உரசல்கள் அதிகரித்தது.

2006ல் மும்பை தாக்குதல் நடந்தது. ரயிலில் 7 குண்டுகள் 11 நிமிடங்களில் வெடித்தது. இதில் 200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லக்ஷர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

2008ம் ஆண்டு மும்பயைில் நடந்த 26/11 தாக்குதல் இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக இருந்தது. 10 தீவிரவாதிகள் மும்பையில் உள்ள ஹோட்டலில் புகுந்து 166 பேரை கொலை செய்தனர். இதில் உயிருடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து 8 ஆண்டுகளுக்கு எந்த பெரிய தாக்குதலும் நடக்கவில்ல. ஆனால் 2016ல் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கி 6 வீரர்களை கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னாள் பாகிஸ்தான் இருந்தது ஆதாரமாக நிரூபிக்கப்பட்டது. ஆனால் பாக். இதனை மறுத்தது. அதே ஆண்டு இதே தீவிரவாத அமைப்பினர் உரி தாக்குதலில் ஈடுபட்டனர். மொத்தம் 19 இந்திய ராணுவ வீரர்களை அவர்கள் கொன்றனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எல்லையை கடந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது.

அடுத்த 3வது ஆண்டில் அதாவது 2019ல் இதே தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலாக இந்தியா விமானப்படை தாக்குதலை நடத்தியது.

இப்போது இந்த தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் பஹல்காம் பகுதியில் தாக்குதலை நடத்தியிருந்தது. இதற்கு பதிலடியாக இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியிருந்தது.

இப்படி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் இனி வரும் காலங்களிலாவது வாலை சுருட்டிக்கொண்டிருக்குமா என்பது சந்தேகமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+