ராஜஸ்தான் எல்லையில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்- பிஎஸ்ப் வீரர்கள் கைது செய்து தீவிர விசாரணை!
டெல்லி: ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த துணை ராணுவப் படை வீரர், தற்போது சிக்கியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் நாட்டின் எல்லைகள் அனைத்திலும் ராணுவ வீரர்கள் அதிஉச்ச உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தானில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் துணை ராணுவப் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பஞ்சாப் மாநில எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர், பூர்ணம் குமார், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பூர்ணம் குமாரை உடனே விடுதலை செய்யவும் மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு, பூர்ணம் குமாரை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரர் பிடிபட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு உளவு தகவலை பகிர்ந்த இளைஞர் ஒருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் அடுத்து சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் எல்லைகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications