அதெல்லாம் இந்தியாவுக்கு எதிராக லண்டனில் எதுவும் பேசலையே.. ராகுல் காந்தி பொளேர் பதிலடி
லண்டன் பேச்சு குறித்து ராகுல் காந்தி விளக்கம் தந்துள்ளார்.
டெல்லி: லண்டன் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக தாம் எதுவும் பேசவில்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி அண்மையில் இங்கிலாந்து சென்றிந்தார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவை ஒடுக்கப்படுவதாக விம்ர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டு பேச்சு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்தார். லோக்சபாவில் பேசிய ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி லண்டனில் இந்தியாவை அவமதித்துவிட்டார். நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்கிறார் ராகுல் காந்தி. அவரது கருத்துக்கு சபை எம்பிக்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ராஜ்யசபாவில் பேசிய பிரகலாத் ஜோஷி, , 1975-ல் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் எங்கே இருந்ததாம்? மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்ட நகலை ராகுல் காந்தி கிழித்தாரே அப்போது எங்கே இருந்தது ஜனநாயகம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
இதனிடையே இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை தந்தார். அப்போது, லண்டனில் தாம் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் தாம் விளக்க அளிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications