செம! இனி நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு சேவை.. பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே முடிவு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான சந்திப்பில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இலங்கையில் யூபிஐ பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளவும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் படகு சேவைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு முடிந்தாலும் கூட இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியையும், கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பொறுப்பேற்றார். இவர் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. இந்நிலையில் தான் 2 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு நேற்று வந்தார்.
டெல்லியில் இன்று ரணில் விக்கிரமே சிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்தது. மேலும் இருநாடுகள் இடையேயான கடல்வழி மற்றும் வான்வெளி போக்குவரத்தை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இடையேயான சந்திப்பில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் யூபிஐ பண பரிவர்த்தனையை அனுமதிக்கும் வகையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதேபோல் தமிழ்நாடு -இலங்கை இடையே பயணிகள் படகு சேவைகள் நடத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications