Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு! 4 டன் மிளகாய் தூளை திரும்ப பெறும் பதஞ்சலி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதால் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை இந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. இதற்கான உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSI) வழங்கியுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், சுத்தப்படுத்தும் திரவியங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

patanjali chilli powder

இந்த பொருட்களை பலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தொலைக்காட்சிகளில் விளம்பரமும் செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவும் அவரது நண்பர் பாலகிருஷ்ணாவும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் பல ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா காலத்தில் அலோபதி மருந்துகளால் சிகிச்சை அளிக்க முடியாது. தங்களது தயாரிப்புகளே கொரோனாவை தடுக்கும் என பதஞ்சலி விளம்பரம் செய்தது.

இதை தவிர்த்து பல நோய்க்களுக்கு தங்கள் பொருட்கள் குணமளிப்பதாகவும் விளம்பரம் செய்திருந்தது. இதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. யோகா பாபா ராம்தேவும் அவரது நண்பரும் தவறான தகவல்களை தெரிவித்தமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு அதை விளம்பரமாக வெளியிட வேண்டும்.

அதாவது உங்கள் ஆயுர்வேத பொருட்களுக்கு செய்த விளம்பரத்தை காட்டிலும் உங்கள் மன்னிப்பு விளம்பரம் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது.

அது முதலே பதஞ்சலி பொருட்களை வாங்குவதை பலர் விட்டுவிட்டனர். இந்த நிலையில் பதஞ்சலி சார்பில் 200 கிராம் எடை கொண்ட சிகப்பு மிளகாய்த் தூள் விற்பனைக்கு வந்தது. இது குறித்த உணவு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. மேலும் இந்த பொருட்கள் உணவுக் கட்டுப்பாட்டு துறைக்கு சோதனைக்காக வரவில்லை என்பதாலும் இதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது இந்த மிளகாய்த் தூளில் பூச்சி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக திரும்ப பெறுமாறு உணவு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை பதஞ்சலி நிறுவனம் திரும்ப பெறுகிறது.

மேலும் வாடிக்கையாளர்களும் இந்த மிளகாய் தூள் பாக்கெட்டுகளை வைத்திருந்தால் தங்களிடம் ஒப்படைக்குமாறு, அப்படி செய்தால் முழு பணத்தையும் திருப்பி தருவதாகவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+