Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினாவில் பேனா நினைவுச்சின்னம்.. இறுதி ஒப்புதல் அளித்தது மத்திய அரசு.. பணிகள் தொடங்குவது எப்போது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மெரினாவில் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

Pen monument at Marina, Final approval given by Central Govt, when will work start?

கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது.

இதை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் கடந்த மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்து இருந்தது.இந்த நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஏற்கனவே சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கிய நிலையில், கடலோர ஒழுங்கு முறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணிகளை இனி தமிழக அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதால் இனி தமிழக அரசின் பொதுப்பணித்துறை டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை தொடங்கப்படும் என தெரிகிறது. வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவிடம் திறக்கப்படுகிறது. எனவே அன்றைக்கே இதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+