மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம்.. "மீறினால் வாபஸ்.." மத்திய அரசு விதித்த 15 நிபந்தனைகள் என்ன?
டெல்லி: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. 15 நிபந்தனைகளுடன் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்த 15 நிபந்தனைகள் என்னென்ன என்பதை காணலாம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டு தமிழக அரசு விண்ணப்பித்து இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றின் விவரத்தை காணலாம்.
* ஏதேனும் தவறான அல்லது போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும்.
* தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மண் அரிப்பு, மணல் திரட்சி குறித்து கண்காணிக்க வேண்டும். * கட்டுமானப்பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.
* ஆமை இனப்பெருக்கம் செய்யும் பகுதி மற்றும் காலத்தில் எந்த ஒரு கட்டுமான பணிகளும் மெற்கொள்ளக் கூடாது.
* பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications