இந்தியாவில்...தொடர்ந்து...உச்சத்தை எட்டும் பெட்ரோல் விலை!!
டெல்லி: டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 45 பைசா விலை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் டெல்லியில் ரூ. 81.19ல் இருந்து ரூ. 81.35 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாட்டின் அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இன்று மட்டும் லிட்டருக்கு 16 பைசா அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை செலவினத்தை வைத்து பெட்ரோல் விலையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு லிட்டர் மீது 92 பைசா அதிகரித்துள்ளது.
குருகிராம் மற்றும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 பைசாவில் இருந்து 33 பைசாவாக அதிகரித்துள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் மீது 15 பைசா அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் மீது 44 பைசா அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு லிட்டருக்கு 83 பைசா அதிகரித்துள்ளது.
ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17, 16, 13 பைசா என்று ஒரு லிட்டர் மீது தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் அதிகரித்து வந்துள்ளது.
Exclusive: சிறு வயதில் குழந்தைகளுடன் இணைந்து அப்பார்ட்மெண்ட்டையே வியக்க வைத்தவர் கமலா ஹாரிஸ்!
மும்பையில் இன்றைய விலை ஒரு லிட்டருக்கு ரூ. 88.02 ஆக இருக்கிறது. ஐதராபாத்தில் ரூ. 84.55 ஆகவும், சென்னையில் ரூ. 84.40 ஆகவும், பெங்களூருவில் ரூ.83.99 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 82.87 ஆகவும், நொய்டாவில் ரூ. 81.80 ஆகவும், குருகிராமில் ரூ. 79.52 ஆகவும் உள்ளது.
கடந்த 20 நாட்களாக டீசல் விலையில் மாற்றமில்லை. டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 73.56 ஆகவும், மும்பையில் ரூ. 80.11 ஆகவும் இருக்கிறது. சென்னையில் ரூ. 78.86 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 77.06 ஆகவும் இருக்கிறது.