சமூக வலைதளங்களை கண்காணிக்க கூடாது.. மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சமூக வலைதளங்களை கண்காணிக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய தகவல் ஒளிப்பரப்பு அமைச்சம் ஒரு கொள்கை முடிவினை எடுத்து அறிவித்தது.

அதனை எதிர்த்து டிஎம்சி கட்சியை சேர்ந்த எம்பியான மொய்த்ரா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவின் விசாரணையில் பங்கேற்ற மத்திய அரசின் வழக்கறிஞர், அரசின் முடிவு மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் இருக்குமானால், அதனை ஒரு போதும் முன்னெடுக்காது என்று கூறினார்.
இதனை அடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்நேரத்தில், மத்திய அரசு மீண்டும் சமூகவலைதளங்களை கண்காணிக்கும் முடிவினை எடுத்தது.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.
அந்த அனுமதியின்படி, நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கண்காணிப்பது, பரிமாறப்படும் தகவல்களை தெரிந்து கொள்வது, அனுப்பப்படும் தகவல்களை இடைமறிப்பது, தகவல்கள் அனுப்புவதை தடை செய்வது உள்ளிட்ட பணிகளை விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மக்களை கண்காணிக்கும் உரிமை யாருக்குமில்லை என்றும், இந்த முடிவை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஏற்கப்பட்டால் நீதிமன்ற விடுமுறை காலம் முடிந்து வரும் ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
-
‘ஜன நாயகன்’ சென்சார் சிக்கல் தொடர்கிறது… படம் பார்க்க ரிவைசிங் கமிட்டியே வரலையாம்! விஜய்க்கு ஷாக்! -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications