ட்ரம்ப் இப்போ பேசவேயில்லையே.. மோடி மூட் சரியில்லைன்னு எப்படி சொன்னார்.. வெளியுறவு அமைச்சகம் வியப்பு
டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே சமீபத்தில் எந்த போன் தொடர்பும் இல்லை என்று இந்திய வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை, கொரோனா தடுப்புக்காக, இந்தியா அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா கோரியபோது அவர்கள் கடைசியாக பேசினர்.

"டிரம்பிற்கும் மோடிக்கும் இடையிலான கடைசி உரையாடல் 2020 ஏப்ரல் 4 அன்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பாக இருந்தது." என்கிறது அந்த வட்டாரங்கள்.
ஆனால், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த ஜென்டில்மேன். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகள் இடையே மிகப் பெரிய மோதல் இருக்கிறது. இரண்டு நாடுகளுமே, பலமான ராணுவத்தை கொண்டுள்ளன. ஆனால் எல்லை விவகாரத்தில் இந்தியாவும் சரி, சீனாவும் சரி அதிருப்தியில் இருக்கின்றன.
நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். தற்போது நிலவும் எல்லை விவகாரம் தொடர்பாக ஆலோசித்தேன். ஆனால் மோடி இந்த விவகாரத்தில் நல்ல மூடில் இல்லை. இப்போதும் கூறுகிறேன். அமெரிக்காவின் உதவி கேட்கப்பட்டால், இருநாடுகளிடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு தெரிவித்திருந்தார் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications