உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ்- உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் இருப்பு, புதிய உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஆகியவை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக உலக நாடுகளை B.1.1.529 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் - ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த B.1.1.529 உருமாறிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்கின்றனர் வல்லுநர்கள். தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, சீனா, இஸ்ரேல், பெல்ஜியம் என இந்த உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இது 50 முறை உருமாற்றம் அடைந்த வைரஸாக சுட்டிக் காட்டுகின்றனர் வல்லுநர்கள்.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இத்தனைக்கும் தென்னாப்பிரிக்காவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களையும் ஓமைக்ரான் வைரஸ் பாதித்திருக்கிறது. இதனால் மத்திய அரசு புதிய பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனமும் ஓமைக்ரான் வைரஸ் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்திருக்கிறது.

பயண கட்டுப்பாடுகள்
இதனால் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழியாக வருவோருக்கு உரிய பரிசோதனை நடத்த வேண்டும் என்று மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருவோருக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மொத்தம் 12 நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கெஜ்ரிவால் கோரிக்கை
இதனிடையே ஓமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகளுடனான விமான சேவைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், கொரோனாவில் இருந்து நமது நாடு மீண்டு வரும் நிலையில் புதிய ஒமிக்ரான் வைரஸ் நமது நாட்டுக்குள் நுழையாமல் இருக்க விமான சேவைகளை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
Recommended Video

பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபா,.பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர். புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மூலமான பாதிப்புகள், தாக்கங்கள் குறித்தும் பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications