தேர்தல் பத்திரங்களால் பின்னடைவா? இவ்வளவு விஷயம் வெளியே வந்ததே அதுவே எங்கள் சாதனை.. சொல்வது மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை; தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதால்தான் இவ்வளவு நன்கொடை விஷயங்களும் வெளி உலகத்துக்கே தெரியவந்தது என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தந்தி டிவி சேனலுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரங்களால் எனக்கு எந்த பின்னடைவுமே இல்லை. அப்படி பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நாங்கள் என்னதான் செய்தோம்?

PM Modi claims Electoral bonds issue no setback


தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது இந்த மோடி. அதனால்தான் தேர்தல் பத்திரம் மூலம் யாரிடம் நன்கொடை பெற்றீர்கள் என விவரம் வெளி உலகத்துக்கு தெரியவந்துள்ளது. யார் யாருக்கு பணம் கொடுத்தனர் என்ற விவரம் முன்னர் யாருக்குமே தெரியாது. இப்போது அத்தனையும் வெட்ட வெளிச்சமாகிவிட்டதே.

எதிர்க்கட்சிகளின் ஊழலை முதலிலேயே தடுத்து நிறுத்தி இருந்தால் நாடு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கும். ஊழல் வழக்கில் சிறைக்குப் போனவர்களை தலைவர்களாக ஏற்கின்றனர்.. அவர்களை வைத்து நாட்டை வழிநடத்த முயற்சிக்கின்றனர். ஊழல்வாதிகளைக் காப்பாற்ற பேரணிகள், போராட்டங்களை நடத்துகின்றனர்.

போதைப் பொருட்களை விற்பவர்கள் சிறைக்கு போகிறார்கள். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பானை பெரும் பிரச்சனையாகி உள்ளது. பணத்துக்காகவே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பணப் பரிமாற்றத்தை மத்திய அமலாக்கத்துறை தடுக்கிறது. ஆனால் கெட்ட பெயர் என்னவோ மத்திய அரசின் அமலாக்கத்துறைக்குதான்.. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+