இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்!
Recommended Video
டெல்லி: இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பீகாரின் மோத்திஹரியில் இருந்து நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பெட்ரோல் சேமிப்பு கிடங்குக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள இருநாடுகளிடையே முடிவு எட்டப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்து ஜூன் மாதம் கருத்து தெரிவித்த நேபாளத்துக்கு இந்திய தூதர் மஞ்சீவ் சிங் பூரி, நேபாளத்தில் மிகப் பெரும் மாற்றத்துக்கு இத்திட்டம் உதவும் என குறிப்பிட்டிருந்தார்.

மொத்தம் ரூ325 கோடி மதிப்பிலானது இத்திட்டம். பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோல் அனுப்பப்பட உள்ளது.
இத்திட்டத்தை வீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, காத்மண்டில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
PM Modi at the joint inauguration of Motihari-Amlekhganj (Nepal) petroleum product pipeline: It is a matter of great satisfaction that the first cross-border petroleum pipeline of South Asia has been completed in record time. It was ready in half the time than expected. pic.twitter.com/TBfaWSBojG
— ANI (@ANI) September 10, 2019
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தெற்காசியாவில் பெட்ரோல் அனுப்புவதற்காக எல்லைகளை கடந்து அமைக்கப்படும் முதலாவது திட்டம் இது. இத்திட்டமானது குறிப்பிட்ட காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் இது.
2015-ம் ஆண்டு நேபாளம் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீள் கட்டமைப்பு பணிகளுக்கு நட்பு நாடான இந்தியா கை கொடுத்து உதவியது. இந்தியாவின் சார்பாக கூர்கா மற்றும் நுவகோட் மாவட்டங்களில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications