கொரோனா தடுப்பு: 7 மாநில முதல்வர்களுடன் செப்.23-ல் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 23-ல் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 92,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,98,230 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,149. இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 86,774 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 10,10,975 ஆகவும் உள்ளது.

மகாராஷ்டிராவில் மிக மோசம்
இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 11,88,015 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 32,216 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,57,933.

ஆந்திரா, தமிழக பாதிப்பு
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,17,776; தமிழகம் 5,36,477. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,751. ஆந்திராவில் மொத்த மரணங்கள் எண்ணிக்கை 5,302.

பிரதமரின் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன் தளர்வுகள் ஆகியவை தொடர்பாக ஆக.11-ந் தேதியன்று கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் ஆந்திரா, கர்நாடகா,தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், குஜராத், தெலுங்கானா மற்றும் உ.பி. மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

செப்.23-ல் மீண்டும் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து வரும் 23-ந் தேதி மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் டெல்லி, ம.பி. ஆந்திரா, உத்தரப்பிர்தேசம், பஞ்சாப் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications