மோடியை பார்த்ததும் நமஸ்தே சொன்ன இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.. ஜி 20 மாநாட்டுக்கு நடுவே சுவாரசியம்
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனும் சந்திப்பு நடந்தது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், அர்ஜெண்டினா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த முறை இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி 20 தலைவர்கள் குவிந்தனர். உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று சந்தித்து பேசினார். இதைப்போல வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், ஜப்பான் பிரதமர் ஆகியோரையும் பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை செய்தார். தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சனிக்கிழமை சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்திக்க வந்த ரிஷி சுனக், 'நமஸ்தே' பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார். ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வுக்குப்பிறகு இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் கூறியதாவது:- 'ஜி-20 உச்சி மாநாட்டுக்கு நடுவே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து நாங்கள் இருவரும் விவாதித்தோம்"என்றார்.
-
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications