சிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி நேரில் அஞ்சலி! கதறி அழுத ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 2005, 2008 மற்றும் 2009ம் ஆண்டு என மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக சிபு சோரன் பதவி வகித்திருந்தார். தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரனின் தந்தைதான் சிபு. இவர்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை தொடங்கியவர்.

சிபு சோரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிபு சோரனின் மறைவை அவரது மகன் ஹேமந்த் சோரன் உறுதி செய்து இருக்கிறார். இதனையடுத்து நேரில் சென்ற பிரதமர் மோடி, சிபு சோரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தந்தையின் மறைவால் சோர்ந்திருந்த ஹேமந்த் சோரனுக்கு மோடி ஆறுதல் சொல்ல, பிரதமர் தோளில் சாய்ந்து கொண்டு ஹேமந்த் சோரன் கதறி அழுதிருக்கிறார்.












Click it and Unblock the Notifications