நாடே எதிர்பார்க்குதே.. மோடி இன்று மக்களவையில் பேசுகிறார்! நம்பிக்கையில்லா தீர்மானமே இதுக்கு தானே
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2 வது நாள் விவாதத்தில் ராகுல் காந்தி, அமித்ஷா உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில் இன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
குக்கி இன பழங்குடி மக்கள் மணிப்பூரில் மெய்தி இனத்தவரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த கொடூரங்கள் உலக அரங்கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. கடந்த சில வாரங்களுக்கு முன் பெண்களை நிர்வானப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், மக்களவை நிகழ்வுகளுக்கே பிரதமர் மோடி வராத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது.
ராகுல் காந்தி முதலில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் சார்பில் டிஆர் பாலு, சவுகதா ராய், திருமாவளவன் உட்பட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசினர்.
முதல் நாள் விவாதம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. இதில் பலரும் எதிர்பார்த்தது போல மதியம் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்றினார். மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டதாகவும், பாரத மாதாவையே அவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஆவேசமாக சாடினார்.
சுமார் 37 நிமிடங்கள் அனல் பறக்க உரையாற்றிய ராகுல் காந்தி, இறுதியில் சபாநாயகரை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்து சென்றது சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது பாஜக எம்பிக்கள் புகாரளித்துள்ளனர். அதை தொடர்ந்து கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உரையாற்றினர். மணிப்பூர் விவகாரம் மட்டுமின்றி, வேலையிழப்பு, மதவாத மோதல்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.
ராகுல் காந்தி பேசியவுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மாலை அமித்ஷா பேசினார். இந்த நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications