Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடே எதிர்பார்க்குதே.. மோடி இன்று மக்களவையில் பேசுகிறார்! நம்பிக்கையில்லா தீர்மானமே இதுக்கு தானே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2 வது நாள் விவாதத்தில் ராகுல் காந்தி, அமித்ஷா உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில் இன்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

குக்கி இன பழங்குடி மக்கள் மணிப்பூரில் மெய்தி இனத்தவரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த கொடூரங்கள் உலக அரங்கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. கடந்த சில வாரங்களுக்கு முன் பெண்களை நிர்வானப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்தது.

PM Modi speech in Lok Sabha No confidence motion starts today

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், மக்களவை நிகழ்வுகளுக்கே பிரதமர் மோடி வராத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார். செவ்வாய்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது.

ராகுல் காந்தி முதலில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் சார்பில் டிஆர் பாலு, சவுகதா ராய், திருமாவளவன் உட்பட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசினர்.

முதல் நாள் விவாதம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. இதில் பலரும் எதிர்பார்த்தது போல மதியம் 12 மணியளவில் ராகுல் காந்தி உரையாற்றினார். மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டதாகவும், பாரத மாதாவையே அவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஆவேசமாக சாடினார்.

சுமார் 37 நிமிடங்கள் அனல் பறக்க உரையாற்றிய ராகுல் காந்தி, இறுதியில் சபாநாயகரை நோக்கி பிளையிங் கிஸ் கொடுத்து சென்றது சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது பாஜக எம்பிக்கள் புகாரளித்துள்ளனர். அதை தொடர்ந்து கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உரையாற்றினர். மணிப்பூர் விவகாரம் மட்டுமின்றி, வேலையிழப்பு, மதவாத மோதல்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.

ராகுல் காந்தி பேசியவுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மாலை அமித்ஷா பேசினார். இந்த நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+