உருமாற்றம் பெற்ற சென்ட்ரல் விஸ்டா அவென்யூ.. புதிய நேதாஜி சிலை.. திறந்து வைத்த பிரதமர் மோடி
டெல்லி: சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை இன்று இரவு 7.30 மணியளவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்படி மறு வடிவமைக்கப்பட்ட ராஜபாத் உள்ள புதிய சென்ட்ரல் விஸ்டா அவென்யூ இன்று திறக்கப்பட்டது.
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் இடையே எதிர்ப்பு அலையை சந்தித்தது.
2019ல் இதற்கான பணிகள் தொடங்கின. 2021, 2022 கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்வது விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு
ஆனால் இதை மத்திய அரசு அத்தியாவசியமான பணி என்று கூறியது. அதோடு மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது, இது அத்தியாவசிய பணி, அதனால் பணிகள் தொடர்ந்து நடக்கலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது அங்கு இருக்கும் ராஜபாதை எனப்படும் கர்தவ்யா பாத் மற்றும் சென்ட்ரல் விஸ்டா ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு
இந்த திட்டத்தின் பகுதியாக மொத்தமாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டன. இங்கு புதிய அலங்காரங்கள் செய்யப்பட்டன. புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் இங்கு புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டு வருகிறது. புதிய பிரதமர் அலுவலகம், மத்திய அரசு துறையின் பல்வேறு புதிய அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டிடத்தை பிரதமர் மோடி ஏற்கனவே திறந்து வைத்துவிட்டார்.

புதிய சிலை
அதேபோல் கடந்த ஜூலை மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இன்று இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய ராஜ பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தியா கேட்டில் இருந்து நாடாளுமன்றம் வரை உள்ள நீண்ட சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 700 ஏக்கர் பரப்பிற்கு இங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.

திறந்து வைத்த பிரதமர் மோடி
புதிய அலங்காரம், விளக்குகள், நீர் நிலைகள், புதிய வகை செடிகள், சிவப்பு கிரானைட் கற்கள், 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் செல்லும் சாலைகள், 16 புதிய பாலங்கள் இந்த பாதையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத்தான் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். அதோடு இந்தியா கேட் அருகே புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பிரதமர் மோடி இன்று திறக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று இரவு 7 மணியளவில் பிரமாண்டமான விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று திறந்து வைத்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications