அடுத்த கட்டத்துக்கு நகரும் பாஜக.. காங்கிரசின் கோட்டை ரேபரேலிக்கு நாளை செல்கிறார் மோடி !
ரேபரேலி தொகுதிக்கு நாளை செல்கிறார் பிரதமர் மோடி
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடி நாளை சோனியா காந்தி தொகுதியான ரேபரேலிக்கு செல்ல உள்ளார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க போகிறார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களை ரொம்பவே அசைத்து போட்டிருக்கிறது. இது சம்பந்தமாக நிறைய கூட்டங்களை நடத்தி விவாதமும், ஆலோசனையும் நடத்தி வருகிறார்கள்.
எனினும் வரும் தேர்தலிலாவது விட்டதை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. என்னைக்கோ நடக்க போகிற தேர்தலுக்கு இப்பவே பிரதமர் மோடி இப்பொழுதே தன்னை ஆட்படுத்தி கொள்ள தயாராகி விட்டார்.

சோனியா தொகுதி
தேர்தல் முடிவுகள் வந்து இத்தனை நாளும் அமைதியாகவே இருக்கும் மோடி, தனது அடுத்த கட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நாளை ஆரம்பிக்கிறார்.

பயண நேரம் குறைகிறது
குறிப்பாக சாலை போக்குவரத்து சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரேபரேலி - பதேபூர், பாண்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ.558 கோடி செலவில் போடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையுடன் 4 புறவழிசாச்சாலைகளும் இணைக்கப்படுவதால், பயணநேரம் குறைக்கப்படுகிறது. அதாவது, பயண தூரம் 7.8 மணி தூரத்திலிருந்து 2.5 மணி தூரமாக குறையும் என சொல்லப்படுகிறது.

விமர்சனம்
பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து மோடி ரேபரேலி தொகுதிக்கு போகவே இல்லை என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர். அதோடு இந்த தொகுதியை மோடி புறக்கணிக்கிறார் என்றும் எந்த வளச்சி திட்ட பணிகளையும் செய்யவே இல்லை என்ற விமர்சனமும் எதிர்க்கட்சி தரப்பில் எழுந்து வந்தது.

திருப்பம்
இந்த குற்றச்சாட்டை உடைத்தெறிவதற்காகவே மோடி ரேபரேலி செல்வதாக கூறப்படுகிறது. முதல்முறையாக ரேபரேலிக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் தொகுதி என்றும் பார்க்காமல் நலத்திட்ட உதவிகளை மோடி செய்ய முனைவது பாஜகவுக்கு நல்ல ஒரு திருப்பத்தையே தரும் என நம்பலாம்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications