மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட தடை! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பிரதமர் மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. பட்டப்படிப்பு தகவல்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தற்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
பிரதமர் மோடி 1978-ல் இளங்கலை (BA) பட்டப்படிப்பை முடித்ததாக கூறப்படும் நிலையில், அதே ஆண்டு BA தேர்ச்சி பெற்ற மாணவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையம் அனுமதித்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நீரஜ் குமார், 1978 ஆம் ஆண்டு BA தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் ரோல் நம்பர், பெயர், மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி/தோல்வி ஆகியவற்றுடன் கூடிய முடிவுகளைக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார். ஆனால் டெல்லி பல்கலைக்கழக அதிகாரி இந்த தகவலை வழங்கவில்லை. நீங்கள் கேட்டிருப்பது 'மூன்றாம் தரப்பு தகவல்' என கூறி மறுத்துவிட்டார்.
இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் குமார் மேல் முறையீடு செய்திருந்தார். மனுவை விசாரித்த ஆணையம், "இது தொடர்புடைய சட்டங்கள் மற்றும் முந்தைய முடிவுகளின் அடிப்படையில், ஒரு மாணவரின் (தற்போதைய/முந்தைய) கல்வி தொடர்பான விஷயங்கள் பொதுத் தளத்தில் வரும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதற்கேற்ப தகவல்களை வெளியிட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு பொது அமைப்பு. பட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட பதிவேட்டில் கிடைக்கும். அது ஒரு பொது ஆவணம். எனவே அதை வெளியிடலாம்" என்று கூறி கழன்றுக்கொண்டது.
இந்த உத்தரவுக்கு எதிராகத்தான் டெல்லி உயர்நீதிமன்றத்தை, டெல்லி பல்கலைக்கழகம் அணுகியிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழகம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியிருந்தார்.
"ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 1978ம் ஆண்டு இளங்களை பட்டம் இருக்கிறது. அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார். ஆனால் வெளியாட்கள் அதை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது" என்று வாதிட்டார்.
மறுபுறம், நீரஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, "நாங்கள் கேட்ட தகவல்கள் பொதுவாக எல்லா பல்கலைக்கழகத்தாலும் வெளியிடப்படும். அறிவிப்பு பலகைகள், பல்கலைக்கழக இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் கூட இவை வெளியிடப்பட்டிருக்கிறது" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்திருக்கிறார். தீர்ப்பின் முழு விரவரம் இன்னும் வெளியாகவில்லை.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications