எல்லையில் படைகளை குவிக்கும் சீனா.. திடீரென மோடிக்கு போன் போட்ட டொனால்ட் ட்ரம்ப்.. என்ன நடக்கிறது?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'முக்கியமான ஆலோசனைகளை' நடத்தியுள்ளார்.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (இன்று) இரவு, நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அடுத்து, அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட மேலும் சில முக்கிய நாடுகளை ஜி7 கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

மோடி டுவிட்டர்
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியுள்ள தகவல்கள்: அமெரிக்க அதிபரும், எனது நண்பருமான டொனால்டு டிரம்புடன் ஆக்கப்பூர்வமான, அருமையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். ஜி7 உச்சி மாநாடு தொடர்பாகவும், கொரோனா பெருந்தொற்று தொடர்பாகவும் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றியும் அப்போது நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

செழுமையான நட்பு
செழுமை மற்றும் ஆழம் கொண்ட இந்திய அமெரிக்க நட்புறவு என்பது, கொரோனா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகான, உலக, கட்டமைப்பின்போது முக்கியமானதாக மாறும். இவ்வாறு நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு பதிலடியா
லடாக் எல்லையில், சீனா அதிகப்படியான படைகளை குவித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டிய நிலையில், டொனால்ட் ட்ரம்ப், மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை
மோடியும் தனது டுவிட்டர் பதிவில், ஜி7 மாநாடு மட்டுமல்லாது மேலும் பல விஷயங்களை பேசியதாக கூறியுள்ள கருத்து வெளியுறவு நிபுணர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறது. இந்த உரையாடலும், மோடியின் டுவிட்டர் பதிவும், சீனாவுக்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. மோடியுடன், சீன விவகாரம் குறித்து பேசியதாக சில தினங்கள் முன்பு ட்ரம்ப் தெரிவித்தார். மோடி நல்ல மூடில் இல்லை என்றும் கூறினார். இதை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் மறுத்தன. இப்போது மோடி-ட்ரம்ப் உரையாடலை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications