Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒட்டுண்ணி காங்கிரஸ், சிறுபிள்ளையாக அழுத ராகுல் காந்தி.. லோக்சபாவில் வெளுத்த மோடி- 15 பாயிண்ட்ஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியை மிக மிக கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி கட்சி என்றார்; எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள் செய்கிறவர் எனவும் விமர்சித்தார் பிரதமர் மோடி.

Narendra Modi parliament

லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று ஆற்றிய உரையின் சில முக்கிய அம்சங்கள்:

  1. லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிகிறது.
  2. எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்குதான் காங்கிரஸுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 100-க்கு 99 இடங்களைப் பெறவில்லை. 543-க்கு 99 இடங்களைத்தான் பெற்றிருக்கிறது.
  3. ஒட்டுண்ணி கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். தமது கூட்டணிக் கட்சிகளை நம்புகிற ஒட்டுண்ணியாகவே இருக்கிறது காங்கிரஸ். கூட்டணி இல்லாமல் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் காங்கிரஸ் வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளது.
  4. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 13 மாநிலங்களில் ஒரு இடம் கூட பெற முடியாத காங்கிரஸ் தம்மை ஹீரோவாக காட்டிக் கொள்கிறது.
  5. தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் 2-வது இடத்தை பாஜக பெற்றுள்ளது. கேரளாவில் பாஜகவின் கணக்கு தொடங்கிவிட்டது.
  6. நாட்டு மக்கள் மீது சர்வாதிகாரத்தை திணித்த கட்சிதான் காங்கிரஸ். நாட்டின் அரசியல் சாசனத்தை ஒடுக்கியதும் காங்கிரஸ்தான்.
  7. எதிர்க்கட்சிகள் இந்துக்களை இழிவுபடுத்துகின்றனர். இந்துக்களை இழிவுபடுத்துகிற எதிர்க்கட்சிகளின் சதி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்து மதத்தை காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் (திமுக) அவமதித்த போது ஆதரித்தவர் ராகுல் காந்தி.
  8. லோக்சபாவில் ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமான நடந்து கொண்டார். பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தை போல ராகுல் காந்தி நேற்று அழுததை நாம் பார்த்தோம்.
  9. மக்கள் என்ன தீர்ப்பு அளித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக பொய்யாக சித்தரிக்கக் கூடாது.
  10. லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து 3 முறை தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் தோல்விகளில் காங்கிரஸ் உலக சாதனையே படைத்துக் கொண்டிருக்கிறது.
  11. ராகுல் காந்தி ஓபிசி ஜாதியினரை அவமதித்தார். அந்த வழக்கில் ஜாமீனில்தான் ராகுல் வெளியே இருக்கிறார். வீர சாவர்க்கரை அவமதித்து பேசிய வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
  12. நாடாளுமன்றத்தை ராகுல் காந்தி தவறாகவே வழிநடத்துகிறார். அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களையே ராகுல் காந்தி லோக்சபாவில் பேசினார்.
  13. சிறுபிள்ளைத்தனமாக ராகுல் காந்தி பேசினார். அதற்காக ராகுல் காந்தி பொய் பேசுவதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்?
  14. போர் விமானங்களை வாங்கியபோது அலட்சியம் செய்து விமர்சித்தது காங்கிரஸ். ஒரே நாடு- ஒரே ஓய்வூதியம் திட்டத்தையும் எதிர்த்ததும் காங்கிரஸ்தான். இந்த தேசத்தின் ராணுவம் பலவீனமடையவே காங்கிரஸ் விரும்புகிறது.
  15. ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை என்கிற எங்கள் கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்து வருகின்றனர். 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்துள்ளோம்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+