உக்ரைன் போர்.. 2 மணி நேரம் நீடித்த பிரதமர் மோடியின் மீட்டிங்.. விவாதிக்கப்பட்டது என்ன? பரபர தகவல்
டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி சுமார் 2 மணி நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் தொடங்கி உள்ளது.
தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட அந்நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டில் இருக்கும் பல முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ள போதிலும், உக்ரைன் ராணுவம் அஞ்சாமல் துணிச்சலாகப் போராடி வருகிறது. குறிப்பாக சில நகரங்களை மீண்டும் மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனிடையே ரஷ்யாவும் உக்ரைனும் பெலாரஸ் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை
இந்தச் சூழலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நீட்டித்த இந்த கூட்டத்தில் அங்குள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்க முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்காக அண்டை நாடுகள் உடனான ஒத்துழைப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் பிரசாரத்தில் முடித்துவிட்டுத் திரும்பிய பிரதமர் மோடி, நேரடியாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்

நேரடியாக கண்காணிக்கும் பிரதமர்
உக்ரைன் நாட்டில் இருந்து மாணவர்கள் அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், "உக்ரைன் அண்டை நாடுகளின் உதவியுடன் மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியே இந்த நடவடிக்கையைத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். அங்குள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் உக்ரைன் அண்டை நாடுகளுக்குச் சிறப்புக் குழுக்களை அனுப்பியுள்ளோம். தற்போதைய நிலைமை சிறப்புக் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகிறோம்" என்றார்.

சிறப்பு விமானங்கள்
ஏற்கனவே, உக்ரைனில் இருந்து ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்குத் தரைவழியாக வந்த மாணவர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 5 மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து மார்ச் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 மீட்பு விமானங்களை இயக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications