மோடியின் ஹெலிகாப்டர் பயணம் திடீர் மாற்றம்.. காரில் சென்றபோது சிக்கல்.. பஞ்சாப்பில் என்னதான் நடந்தது?
பிரதமர் மோடியின் 2 மணி பயண நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது
டெல்லி: பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது... இதையடுத்து பல்வேறு விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து நாட்டையே பரபரப்பாக்கிவிட்டன.. உண்மையிலேயே பிரதமரின் பயணத்தில் அந்த 2 மணி நேரம் என்னதான் நடந்தது?
Recommended Video

பஞ்சாபில் அந்த 2 மணி நேரம் என்னதான் நடந்தது?
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்... அப்போது மோசமான வானிலை காரணமாக அவரது பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது.

பயணம்
மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை ஏர்போர்ட்டிலேயே அவர் காத்திருக்க நேர்ந்தது.. ஆனால், வானிலை தொடர்ந்து சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்பட்டது... அதுவும், பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பிறகே, பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேம்பாலம்
அதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தது.. அங்கே சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கி கொண்டன... இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி, சரியாக 18 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால், 10 கிமீ முன்னதாகவே வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வீடியோ
இது தொடர்பான வெளியான வீடியோக்களில், காருக்குள்ளேயே பிரதமர் உட்கார்ந்திருந்ததையும் காண முடியும்.. ஆனால், பிரதமரை மற்ற வாகனங்கள் சூழ்ந்து கொண்டன.. இதில் போராட்டக்காரர்களின் ஒருசில விவசாயிகள் மோடியின் வாகனத்துக்கு அருகிலேயே நின்றிருப்பதையும் காண முடிந்தது.. கடைசியாகத்தான் அங்கிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது... பிரதமரின் வாகனம் திரும்பியதுமே, அதற்கு பின்னால் போராட்டக்காரர்களும் சேர்ந்து ஓடியதும் அந்த வீடியோக்களில் பதிவாகி இருந்தது.

பரபரப்பு
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.. உடனடியாக பதிண்டா ஏர்போர்ட்டுக்கே பிரதமர் மோடி திரும்பி சென்றார்... பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications