Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியின் ஹெலிகாப்டர் பயணம் திடீர் மாற்றம்.. காரில் சென்றபோது சிக்கல்.. பஞ்சாப்பில் என்னதான் நடந்தது?

பிரதமர் மோடியின் 2 மணி பயண நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது அங்கு அவர் சென்ற பாதையை போராட்டக்காரர்கள் வழிமறித்து சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது... இதையடுத்து பல்வேறு விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து நாட்டையே பரபரப்பாக்கிவிட்டன.. உண்மையிலேயே பிரதமரின் பயணத்தில் அந்த 2 மணி நேரம் என்னதான் நடந்தது?

Recommended Video

    BJP VS Congress | Punjab சம்பவம் திட்டமிட்ட சதியா? | PM Modis Convoy Blocked | Oneindia Tamil

    பஞ்சாபில் அந்த 2 மணி நேரம் என்னதான் நடந்தது?

    பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை பஞ்சாபின் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பதிண்டாவில் தரையிறங்கினார்... அப்போது மோசமான வானிலை காரணமாக அவரது பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது.

    பயணம்

    பயணம்

    மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, மேகம் தெளிவடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் வரை ஏர்போர்ட்டிலேயே அவர் காத்திருக்க நேர்ந்தது.. ஆனால், வானிலை தொடர்ந்து சீரடையாததால், சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிடப்பட்டது... அதுவும், பஞ்சாப் மாநில காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்திய பிறகே, பிரதமர் சாலை வழியாக பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

     மேம்பாலம்

    மேம்பாலம்

    அதன்படி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் பிரதமரின் வாகனம் ஒரு மேம்பாலத்தை அடைந்தது.. அங்கே ​​​​சில எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அதனால் அந்த மேம்பாலத்தில் பிரதமரும் அவரது வாகன தொடரணியும் 15-20 நிமிடங்கள் சிக்கி கொண்டன... இந்த இடத்தில் இருந்து பிரதமர் பயணம் செய்ய வேண்டிய பகுதி, சரியாக 18 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால், 10 கிமீ முன்னதாகவே வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

     வீடியோ

    வீடியோ

    இது தொடர்பான வெளியான வீடியோக்களில், காருக்குள்ளேயே பிரதமர் உட்கார்ந்திருந்ததையும் காண முடியும்.. ஆனால், பிரதமரை மற்ற வாகனங்கள் சூழ்ந்து கொண்டன.. இதில் போராட்டக்காரர்களின் ஒருசில விவசாயிகள் மோடியின் வாகனத்துக்கு அருகிலேயே நின்றிருப்பதையும் காண முடிந்தது.. கடைசியாகத்தான் அங்கிருந்து திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது... பிரதமரின் வாகனம் திரும்பியதுமே, அதற்கு பின்னால் போராட்டக்காரர்களும் சேர்ந்து ஓடியதும் அந்த வீடியோக்களில் பதிவாகி இருந்தது.

    பரபரப்பு

    பரபரப்பு

    பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.. உடனடியாக பதிண்டா ஏர்போர்ட்டுக்கே பிரதமர் மோடி திரும்பி சென்றார்... பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+