இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனி தபால்துறை வினாத்தாள்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் கார்டு (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற தபால் துறை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு வினாத்தாள் அந்தந்த மாநில மொழிகளில் (23 மாநில மொழிகளிலும்) வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தபால் துறை பணியிட தேர்வுக்கான படத்திட்டம் கடந்த மே 10ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அந்த அறிவிப்பிலேயே வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனைத்த தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், அனைத்து தேர்வுகளுக்கும் தாள் ஒன்று வினாத்தாள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில மொழிகளில் வழங்கப்படாது.
இதன் மூலம் முதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதிய தேர்வர்கள் இனி . இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.
ஆனால் அதே நேரம் இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாள்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் வினாத்தாள்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தபால் துறை வேலை வாய்ப்புகளுக்கு நடத்தும் தேர்வுகளில் அனைத்து தாள்களும் 23 மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்த பல ஆண்டு நடைமுறையை மத்திய அரசு மாற்றியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications