டெல்லியில் முகாமிட்ட பிரகாஷ் ராஜ்.. ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்
டெல்லி: ஆம் ஆத்மியின் கரங்களை வலுப்படுத்த டெல்லி சென்றுள்ள பிரகாஷ்ராஜ் - ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி சென்றுள்ளார். அவர் அங்கு ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒருவாரம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் ஆம் ஆத்மீக்கு பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராயுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது "நானும் ஆம் ஆத்மீயில் ஒருவன்தான் என்று கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், மாற்றத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சி போராடிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய கட்சிக்கும், அதன் வேட்பாளர்களுக்கும் நான் ஆதரவளிக்க விரும்புகிறேன்.
கல்வி சுகாதாரம் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆம் ஆத்மி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இன்றைய நிலையில் நமது நாட்டுக்கு இதுதான் வேண்டும். நம் நாட்டில் பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்டவர்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். வெவேறு சிந்தனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் நாம் நாட்டை நேசிப்பதில் ஒன்று பட்டு இருக்கின்றோம்.
நமது நாட்டின் குடியரசை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டும். தற்போது ஆட்சி செய்வோரின் மதவாத, வெறுப்புணர்ச்சி அரசியலால் குடியரசை இழக்கக்கூடிய அபாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது இப்படி அழிவின் விளிம்பில் இருக்கும் குடியரசை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் திலிப் பாண்டேவுக்கு நேற்று ஆதரவு திரட்டிய பிரகாஷ்ராஜ் புதுடெல்லியில் பிரிஜேஷ் கோயலையும், கிழக்கு டெல்லியில் ஆதிஷியை ஆதரித்தும் பிரச்சாரம் நடத்தவுள்ளார், அதோடு அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்லியில் தங்கி பிரச்சாரம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications