நாட்டின் துடிப்பான ஜனநாயக சக்திக்கு தலை வணங்குகிறேன்! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
டெல்லி: இன்றுடன் ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
Recommended Video
இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்தி இருந்தார்.
திரௌபதி முர்மு நாளைய தினம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்க உள்ளார். இந்தச் சூழலில் இன்றுடன் ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாவின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு வணக்கம் செலுத்துவதாகும் அனைவரும் வேர்களுடன் இணைந்திருப்பதே இந்திய கலாசாரத்தின் சிறப்பு என்றும் கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், "சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு நாட்டிற்குச் சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பு.

இளைஞர்கள் தங்கள் சொந்த கிராமங்கள், படித்த பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு சிறப்பானது. நாட்டின் அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.
காந்தியின் பாணியில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கட்சிகள் மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கப் போராட்டம் உள்ளிட்ட பல வழிகளை அரசியலமைப்பு நமக்கு வழங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தேசத்தின் தந்தை அந்த நோக்கத்திற்காகச் சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.
ஆனால் காந்தி இதன் மறுபக்கம் குறித்தும் கவலைப்பட்டார். குடிமக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கோரிக்கைகளை வலியுறுத்தவும் உரிமை உள்ளது, ஆனால் அது எப்போதும் அமைதியான காந்திய வடிவில் இருக்க வேண்டும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications