Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனாதிபதி தேர்தல்:துரோகம் செய்த கறுப்பு ஆடுகள்- 120 எம்எல்ஏக்கள்,17 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் 120 எம்.எல்.ஏக்கள், 17 எம்.பி.க்கள் கட்சி மாறி திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 22 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வரும் 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.

திரெளபதி வெற்றி

திரெளபதி வெற்றி

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரெளபதி முர்மு 6,76,803 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80, 177 வாக்குகள் கிடைத்தன. 64%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற திரெளபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.

முதல் பழங்குடி பெண்

முதல் பழங்குடி பெண்

இந்தியாவில் ஜனாதிபதியாகும் 2-வது பெண் திரெளபதி முர்மு. அவருக்கு முன்னதாக பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்தார். இந்தியாவில் ஜனாதிபதியாகும் முதல் பழங்குடி இனத்தவர் திரெளபதி முர்மு. அவரது வெற்றியை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கட்சி மாறி வாக்களிப்பு

கட்சி மாறி வாக்களிப்பு

திரெளபதி முர்முவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் 17 பேர் வாக்களித்துள்ளனர்; அதேபோல் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 120 எம்.எல்.ஏக்களும் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரையில் அஸ்ஸாமில்தான் மிக அதிகமான எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.

Recommended Video

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
    எந்த மாநிலங்கள்?

    எந்த மாநிலங்கள்?

    மாநிலங்கள் வாரியாக கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏக்கள் விவரம்: அஸ்ஸாம்- 22; மத்திய பிரதேசம்- 19; மகாராஷ்டிரா 16; உ.பி- 12; குஜராத் 10; ஜார்க்கண்ட் 10; பீகார்- 6; சத்தீஸ்கர்- 6; ராஜஸ்தான் 5; கோவா- 4. இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 126 பேர் கொண்ட சட்டசபையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 79 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் 104 எம்.எல்.ஏக்கள், திரெளபதி முர்முவுக்கு வாக்களித்தனர். 2 பேர்தான் வாக்களிக்கவில்லை என விளக்கம் அளித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+