பதவியேற்ற முதல் நாளிலேயே அவசர நிலை பிரகடனத்துக்கு எதிரான தீர்மானம்- ஓம் பிர்லாவுக்கு மோடி பாராட்டு!
டெல்லி: லோக்சபா சபாநாயகராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே அவசர நிலைப் பிரகடனத்துக்கு எதிராக ஓம் பிர்லா தீர்மானம் நிறைவேற்றியதற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை லோக்சபா வன்மையாக கண்டனம் செய்கிறது., எமர்ஜென்சியை எதிர்த்து போராடி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த அனைவரின் உறுதியையும் பாராட்டுகிறோம் என ஓம் பிர்லா தமது தீர்மானத்தில் தெரிவித்திருந்தார்.
18-வது லோக்சபாவின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதன் பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றை வாசித்தார். அதில், 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை லோக்சபா வன்மையாக கண்டனம் செய்கிறது., எமர்ஜென்சியை எதிர்த்து போராடி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த அனைவரின் உறுதியையும் பாராட்டுகிறோம் என ஓம் பிர்லா தமது தீர்மானத்தில் தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். ஓம் பிர்லாவின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: அவசர நிலையை வன்மையாகக் கண்டித்துள்ள மக்களவைத் தலைவர், அந்த நேரத்தில் நடந்த அத்துமீறல்களையும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட விதத்தையும் எடுத்துக்காட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் மௌனம் அனுசரித்தது ஓர் அற்புதமான செயலாகும்.
50 ஆண்டுகளுக்கு முன் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அரசியல் சாசனம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, பொதுமக்களின் கருத்து நசுக்கப்பட்ட போது, நிறுவனங்கள் அழிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதற்கு இது ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ஆகும். அவசர நிலையின் போது நடந்த சம்பவங்கள் ஒரு சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications