திருவனந்தபுரம் ஏர்போர்ட் குத்தகை.. மத்திய அமைச்சருக்கு எதிராக கேரள எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்
டெல்லி: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான விவகாரத்தில், கேரளாவைச் சேர்ந்த சிபிஐ (எம்) மாநிலங்களவை எம்.பி., எலமாரம் கரீம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துள்ளார்.
Recommended Video
இது பற்றி, கரீம் மாநிலங்களவை செயலாளர் தேஷ் தீபக் வர்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜ்யசபா நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் 187 வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்குவதாக கரீம் அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசு ஒருதலைப்பட்ச முடிவை எடுத்துள்ளது என்றும், இது கேரள மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாக ஹர்தீப் சிங் பூரி மார்ச் மாதம் அவையில் கூறியதாகவும், அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும், ஆனால், மத்திய அமைச்சரவை திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. எனவே அவைக்கு தவறான தகவலை கூறியதற்காக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக உரிமை மீரல் பிரச்சினை கிளப்பியுள்ளார் கரீம்.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications