குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: டெல்லியில் காந்தி நினைவிடத்தில் காங். சத்தியாகிரகப் போராட்டம்
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் அருகே திடீரென காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்திலும் பிரியங்கா காந்தி பங்கேற்றார். இந்நிலையில் இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் திடீரென காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோணி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், கமல்நாத் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இப்போராட்டத்தை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications