"என் சகோதரனுக்காக நான் என் உயிரைக் கூட கொடுப்பேன்.." பிரியங்கா காந்தி உருக்கம்
டெல்லி: ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பிரியங்கா காந்தியே பதில் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்.10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த 2 ஆண்டுகளாகவே உபி-இல் முகாமிட்டு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் திட்டம்.

தீவிர பிரசாரம்
இதற்கா பெண்களை முன்னிறுத்து காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், உத்தரப் பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் அங்கு முடிந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.

குற்றச்சாட்டு
இதற்கிடையே சமீபத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும் அது காங்கிரஸ் கட்சியையே ஒட்டுமொத்தமாக அழித்து வருவதாகச் சாடியிருந்தார். இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தனக்கும் தனது சகோதரருக்கும் இடைய மோதல் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

விளக்கம்
இது தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி,"என் சகோதரனுக்காக நான் என் உயிரைக் கூட கொடுப்பேன். அதேபோல அவரும் எனக்காக அவரும் உயிரைக் கூட கொடுப்பார். எங்களுக்கு இடையே எங்கே மோதல் உள்ளது. யோகி ஆதித்யநாத் மனதில் தான் மோதல் உள்ளது. பாஜகவில் அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே தான் மோதல் உள்ளது. அதைச் சமாளிக்கத் தான் அவர் இப்படிச் சொல்லி வருகிறார்" என்றார்.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications