புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசிற்கு 19 –23 இடங்கள் : ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி : புதுச்சேரியில் என்ஆர் காங்கிரசிற்கு 19 முதல் 23 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி நிறுவனம் நடத்தி உள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 6 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் ஏபிபி மற்றம் சி வோட்டர் ஆகியன இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை இன்று வெளியிட்டுள்ளன.
இதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி 19 முதல் 23 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி 6 முதல் 10 இடங்களை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகள் ஒன்று அல்லது 2 இடங்களை மட்டுமே கைப்ற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்பா.. சொல்லியடிக்கும் மம்தா.. 164 இடங்களை பெற்று அதிரி, புதிரி வெற்றி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்!
ஓட்டு சதவீதத்தை பொருத்தவரை என்.ஆர். காங்- பாஜக: 47.1%; காங்-திமுக 34.20% ; இதர கட்சிகள் 18.70% வாக்கு சதவீதம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.