காஷ்மீர் தாக்குதல்.. ஜம்முவில் விஹெச்பி, பஜ்ரங் தள் போராட்டம்.. வாகனங்கள் எரிப்பு, 144 தடை உத்தரவு
டெல்லி:புல்வாமா தாக்குதலை கண்டித்து ஜம்மு நகரில் நடந்த போராட்டத்தில் வாகனங்கள் கொளுத்தப்பட்டன.கல்வீச்சு என வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை பின்னணியாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார்.

தாக்குதலில் 44 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்று மத்திய அரசு நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதி அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந் நிலையில், ஜம்மு நகரில் பாகிஸ்தானை கண்டித்து சிவசேனா, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. கைகளில் தேசிய கொடி ஏந்தி அவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியது.
குஜ்ஜார் நகர் பகுதியில் வன்முறை தொடங்கியது. வன்முறையின் போது அங்கிருந்த 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் சூறையாடப்பட்டன. 8க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து, ஜானிபுர், பக்ஷி நகர், சென்னி ஹீமத் ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர். அமைதியாக இருக்குமாறு போலீசார் கடுமையாக எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து பதற்ற நிலை நீடிப்பதால், ஜம்மு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications