காஷ்மீர் தாக்குதல்.. ஜம்முவில் விஹெச்பி, பஜ்ரங் தள் போராட்டம்.. வாகனங்கள் எரிப்பு, 144 தடை உத்தரவு
டெல்லி:புல்வாமா தாக்குதலை கண்டித்து ஜம்மு நகரில் நடந்த போராட்டத்தில் வாகனங்கள் கொளுத்தப்பட்டன.கல்வீச்சு என வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை பின்னணியாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார்.

தாக்குதலில் 44 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்று மத்திய அரசு நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதி அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந் நிலையில், ஜம்மு நகரில் பாகிஸ்தானை கண்டித்து சிவசேனா, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. கைகளில் தேசிய கொடி ஏந்தி அவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியது.
குஜ்ஜார் நகர் பகுதியில் வன்முறை தொடங்கியது. வன்முறையின் போது அங்கிருந்த 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் சூறையாடப்பட்டன. 8க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து, ஜானிபுர், பக்ஷி நகர், சென்னி ஹீமத் ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர். அமைதியாக இருக்குமாறு போலீசார் கடுமையாக எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து பதற்ற நிலை நீடிப்பதால், ஜம்மு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications