வேலை கேட்டு வந்த இளம்பெண்ணை வீடியோ காலில் அழைத்து ஆபாசம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மீது பரபர புகார்
டெல்லி: வேலை கிடைப்பதற்கு உதவி கேட்டு வந்த 21 வயது இளம்பெண்ணை வீடியோ காலில் அழைத்து ஆடைகளை கழற்ற சொல்லி ஆபாச செயலில் ஈடுபட்டதாக பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் சிங் மான் உள்ளார். பகவந்த் சிங் மானின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல்கர் சிங், வேலை கேட்டு வந்த பெண் ஒருவரை வீடியோ காலில் வரச்சொல்லி ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பாரதிய ஜனதா யுவமோர்ச்சா தேசிய செயலாளராக இருக்கும் பக்கார், தனது எக்ஸ் தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில், வேலை கிடைக்க உதவி அளிக்குமாறு நாடி வந்த பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாசமாக ஆம் ஆத்மி அமைச்சர் பல்கர் சிங் நடந்து கொண்டதாகவும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி புகைப்படம் ஒன்றையும் காட்டி உள்ளார்.
பக்கார் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், “21 வயது சகோதரி ஒருவர் பஞ்சாப் அமைச்சர் பல்கர் சிங்கிடம் வேலை கேட்டு அணுகியிருக்கிறார். அந்த பெண்ணை வீடியோ காலில் பேச வருமாறு அழைத்த பல்கர் சிங், உடைகளை கழற்ற சொல்லி, தகாத முறையில் ஆபாசமாக வீடியோ காலில் அத்துமீறியுள்ளார். பல்கர்சிங்கை உடனடியாக கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்.. போலீசார் சொல்வது என்ன?
மேலும், அமைச்சர் ஆபாசமாக நடந்து கொண்டது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பஞ்சாப் அமைச்சர் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஷேஷாத் பூன்வாலா தனது எக்ஸ் தளத்தில் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியை விமர்சிக்கும் காங்கிரஸ், ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் மவுனம் காக்கிறது. கெஜ்ரிவாலும் பகவந்த் மான் சிங்கும் பல்கர் சிங்கை நீக்குவார்களா? ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் தனது மவுனத்தை கலைப்பாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications