ஷாரூக் கானுடன் கைகோர்த்த.. 'ராடிகோ கைதான்' நிறுவனம்! புதிய கம்பெனி தொடக்கம்
டெல்லி: இந்தியாவில் நீண்ட கால பிஸினஸ் அனுபவம் உள்ள 'ராடிகோ கைதான்' நிறுவனம், நடிகர் ஷாரூக் கான், அவரது மகன் ஆர்யன், நிகில் காமத் ஆகியோருடன் இணைந்து 'D'YAVOL' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.
'ராடிகோ கைதான்' நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் 1943 ஆம் ஆண்டு 'ராம்பூர் டிஸ்டில்லரி கம்பெனி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் நேற்று, நடிகர் ஷாரூக் கான், அவரது மகன் ஆர்யன் மற்றும் ஜெரோதாவின் நிறுவனர் நிகில் காமத் ஆகியோருடன் இணைந்து "D'YAVOL" என்ற புதிய வணிக நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது.
D'YAVOL BV மற்றும் D'YAVOL இந்தியா ஆகிய நிறுவனங்களில் 47.5% பங்குகளைப் பெறுவதற்காக ரடிகோ கைதான் ₹40 கோடி முதலீடு செய்யும் என்றும், இதன் மூலம் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஷாரூக் கான் தனது மகன் ஆர்யனுடன் இணைந்து D'YAVOL-ஐ ஒரு ஆடம்பர பிராண்டாக அறிமுகப்படுத்தியிருந்தார்.












Click it and Unblock the Notifications