ரபேல் டீலில் எந்த கேரண்டியும் இல்லை.. பணம் போனால் போனதுதான்.. சிஏஜி அறிக்கையில் வெளியான உண்மை!
ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை மூலம் புலனாகி இருக்கிறது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை மூலம் புலனாகி இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று வெளியானது. பல நாட்களாக இந்த அறிக்கை எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ராஜ்ய சபாவில் சிஏஜி தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட 2.86% குறைந்த விலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதே சமயம் இந்த சிஏஜி அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிரான மிக முக்கியமான தகவல் ஒன்றும் அடங்கியள்ளது. அதன்படி ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை மூலம் புலனாகி இருக்கிறது.
பொதுவாக ராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது மூன்று விதமான வாக்குறுதிகள் அளிக்கப்படும். அதன்படி ஒரே தரத்தில் அனைத்து பொருட்களும் அளிக்கப்படும், வங்கி பரிவர்த்தனை வாக்குறுதி, பொருட்களை சரியாக டெலிவரி செய்யும் உத்தரவாதம், ஆகிய மூன்றும் அளிக்கப்படும்.
ஆனால், மத்திய அரசு செய்த இந்த பிரான்ஸ் ரபேல் ஒப்பந்தத்தில் இந்த மூன்று உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.
1. இந்தியாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, பின் பிரான்ஸ் விமானத்தை அளிக்காமல் ஏமாற்றலாம்.
2. விமானத்தின் விலையை பிரான்ஸ் நினைக்கும் போது உயர்த்தலாம்.
3. தரமற்ற விமானங்களை அளிக்க விரும்பினால் அளிக்கலாம்.
4. விமானத்தை டெலிவரி செய்வதில் காலதாமதம் செய்யலாம்.
இதனால், இந்த ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானம் இந்தியாவிற்கு கிடைக்காமல் கூட போகலாம். சிஏஜி அறிக்கை இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications