பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒன்னும் அறிவிக்கல.. ஏன் இரட்டை வேடம்.? மத்திய அரசை சாடிய ராகுல்
டெல்லி: மக்களவையில் இன்று உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்தார். கேரளாவின் வயநாடு தொகுதியில் நிகழும் விவசாயிகளின் தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்து மக்களவையில் பேசினார் ராகுல்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக தாக்கி பேசிய ராகுல் காந்தி, அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மக்களவையில் ஜீரோ ஹவரின் போது பேசிய ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்க பல வங்கிகள் பல்வேறு வழிமுறைகளை தீவிரமாக கையாண்டு வருகின்றன.
இதனால் இதுவரை சுமார் 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடனை திருப்பி செலுத்த விவசாயிகளுக்கு கேரள அரசு டிசம்பர் 31 2019 வரை அவகாசம் அளித்துள்ளது. ஆனால் இந்த கால நீடிப்பை பரிசீலித்து அதை நடைமுறைப்படுத்த, ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது என ராகுல் புகார் கூறினார்.
விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கியிடம் பேசி, கேரள அரசின் ஒப்புதலுடன் விவசாயிகளுக்கு பறிமுதல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் தாங்கள் பெறும் கடனுக்காக, சொத்து ஆவணங்களை வங்கிகளிடம் தருவதே ஒருகட்டத்தில் அவர்களின் தற்கொலைக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது என்றார்.
கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தங்களது வாழ்வையே முடித்து கொள்ளும் அவல சூழல் நிலவும் நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கண்டு தாம் வருத்தமடைந்ததாக ராகுல் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக விவகாரங்களில் பிரதமரின் நிலைப்பாடுகளுக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் ராகுல் சுட்டிக்காட்டினார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய ராஜ்நாத் சிங், விவசாயிகளின் துயர நிலை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. இந்தியாவை பல்லாண்டுகளாக ஆட்சி செய்தவர்களும் தான் விவசாயிகள் படும் துன்பத்திற்கு காரணம் என சாடினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications