Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுத்தமான காற்று அடிப்படை உரிமை.. டெல்லி குடிமக்களை குற்றவாளி போல நடத்துவதா.. ராகுல் காந்தி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து அபாய நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மையான காற்றை கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்து இழுத்து சென்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குடி மக்களை குற்றவாளிகளை போல நடத்துவதா என்று மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காற்று மாசின் தரக்குறியீடு 600 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது. அங்கு அபாய கட்டத்தையும் தாண்டி, ரெட்ஜோனுக்கு சென்றுள்ளது. காற்று மாசு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Delhi Air Pollution

அடிப்படை உரிமை

டெல்லி காற்று மாசு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு எட்டக் கோரி, நேற்று டெல்லி கேட் முன்பு மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூய்மையான காற்று எங்கள் அடிப்படை உரிமை, உடனடியாக நடவடிக்கை வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர், ராணுவத்தினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தூய்மையான காற்று என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி அற வழியிலான போராட்டத்திற்கு குடி மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

அக்கறை இல்லாத அரசு

சுத்தமான காற்று வேண்டும் என்று போராடும் குடி மக்களை எதற்காக குற்றவாளிகளை போல நடத்த வேண்டும். காற்று மாசு பிரச்சனையால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி, நாட்டின் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

வாக்கு அரசியலை மட்டுமே முன்வைத்து செயல்பட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதைப்பற்றி துளியும் கவலைப்படவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை சரிபடுத்த மாநில அரசு துளியும் அக்கறை காட்டவில்லை. தூய்மையான காற்றை கேட்டு போராடும் மக்கள் மீது அதிகாரம் திணிப்பதை விட்டு, இந்த பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். ராகுலை போல பல தலைவர்கள் போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், டெல்லி பாஜக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+