ராகுல்காந்திக்கு பிராமணருக்கான எந்த தகுதியும் இல்லை.. சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
டெல்லி: ராகுல்காந்தி ஞானியும் இல்லை, தியாகியும் இல்லை, தவிர அவருக்கு பிராமணருக்கான எந்த தகுதியும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
அண்மையில் முடிந்த 5 மாநில தேர்தலின் போது, ராகுல்காந்தி தான் பிராமணன் என்று சொன்னது எல்லாம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றி பெறுவதற்காகதான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிதி ராணி விமர்சித்தார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பா.ஜ.க., மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தி ஞானியும் இல்லை, தியாகியும் இல்லை.
தன்னை, பிராமணன் என சொல்லுவதற்கு ராகுல்காந்திக்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல் காந்தி தேர்தலுக்காக மட்டும்தான் பிராமணன் என்று சொல்லி வருகிறார். குறிப்பாக அவர் இந்து மதத்தை வைத்து விளையாடி வருகிறார் என்று சுப்ரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications