குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை.. ராகுலும், பிரியங்காவும் மனித உரிமை ஆணையத்தில் புகார்
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்சி, புத்த மதத்தினர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே அந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும்.

குறிப்பாக மூன்று நாடுகள், 6 மதத்தினரை மட்டும் மத்திய அரசு குறிப்பிட்டதால் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.
இதில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பலர் பலியாகிவிட்டனர். இந்த உயிரிழப்புகளுக்கு போலீஸாரே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, கட்சித் தலைவர்கள் நேற்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் இந்த வன்முறைகள் குறித்து புகார் அளித்தனர்.
அதிலும் குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போலீஸார் நடத்திய வன்முறை சம்பவங்கள், தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications