வருங்கால மனைவி எப்படியிருக்க வேண்டும்?.. யாத்திரையின் ஓய்வில் மனம் திறந்த ராகுல் காந்தி!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி தனது வருங்கால மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் திட்டத்தை ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீரில் முடிகிறது. இந்த ஜோடோ யாத்திரையில் மக்களோடு மக்களாக பழகி வருகிறார்.

100 நாட்கள்
தற்போது 100 நாட்களை கடந்த ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் எனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி எனது வாழ்க்கையின் அன்பு. மேலும் அவர் எங்களை தூக்கி வளர்த்த அவர் இரண்டாவது அன்னையாவார். நான் ஒரு பெண்ணை விரும்புவேன்.

கவலையில்லை
அவருக்கு எந்த மாதிரி குணநலன்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் எனது தாய் சோனியாவின் குணமும் பாட்டி இந்திராவின் குணமும் ஒரு சேர அந்த பெண்ணுக்கு இருந்தால் நல்லது. அந்த எனக்கு இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் மிகவும் விருப்பமாக இருக்கும். நான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டியுள்ளேன். ஆனால் எலக்ட்ரிக் பைக் ஓட்டியதில்லை.

சீன நிறுவனம்
இந்த சீன நிறுவனத்தை பார்த்திருக்கிறீர்களா, எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட சைக்கிள்கள் மற்றும் மலை பைக்குகளை வைத்திருக்கின்றன. மிகவும் சுவாரஸ்மான விஷயம். அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எனக்கு சொந்தமாக கார் இல்லை. நான் எனது தாயின் காரை பயன்படுத்தி வருகிறேன். உண்மையில் எனக்கு கார்கள் மீது ஆர்வமே இல்லை. மோட்டார் சைக்கிள்கள்தான் எனக்கு பிடிக்கும்.

வேகமாக இயக்க பிடிக்கும்
என்னால் காரை சரி செய்ய முடியும். எனக்கு வேகமாக காரில் செல்வதும் பிடிக்கும். என்னை யார் கிண்டல் செய்தாலும் எனக்கு கவலையில்லை, உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அப்படியே என்னை கூப்பிடுங்கள். நான் யாரையும் வெறுக்க மாட்டேன். நீங்கள் என்னை விமர்சித்தாலும் சரி அடித்தாலும் சரி நான் உங்களை வெறுக்கவே மாட்டேன். பப்பு என எத்தனை பெயர்களில் அழைத்தாலும் எனக்கு கவலையே இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். புத்தாண்டையொட்டி 9 நாட்களுக்கு ஜோடோ யாத்திரையிலிருந்து ஓய்வு எடுத்துள்ள ராகுல், தனது பயணத்தை மீண்டும் ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறார். தமிழகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு விருப்பத்தையும் ராகுல் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications