காங்கிரஸ் ஆட்சியில் மக்களிடம் பெறப்பட்ட வரி 24%.. பாஜக ஆட்சியில் 48%.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களை விட பொதுமக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வசூலிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அண்மையில் கூட்டியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் வரி விதிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
'மக்களிடம் இருந்து அதிக வரியை வசூலியுங்கள்; கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை குறையுங்கள்' என்பதே மத்திய பாஜக அரசின் கொள்கையாக உள்ளது. உதாரணமாக, கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட வரி 40 சதவீதமாகவும், மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரி 24 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், 2021-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் வரி 24 சதவீதமாக குறைந்தவிட்டது. அதே சமயத்தில், மக்களிடம் இருந்து பெறப்படும் 48 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இவ்வாறு அதில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதனிடையே, ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில், "பொய்யான புள்ளிவிவரங்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்துவதே ராகுல் காந்தியின் வேலையாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நேரடி வரி மட்டுமல்லாமல் மறைமுக வரி, கலால் வரி, சுங்க வரி, செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் பெறப்படுகின்றன. கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பெறப்பட்ட வரி 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல, தனிநபர்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாயும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், 2013-14-ம் நிதியாண்டில் 5.7 கோடியாக இருந்த வரி செலுத்துபவர்கள், 2021-22-ம் நிதியாண்டில் 9 கோடியாக அதிகரித்து விட்டனர். கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அமித் மால்வியா கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications