கல்வானில் சீனா கொடியேற்றும் வீடியோ.. இப்பவாவது மவுனத்தை கலையுங்க... மோடிக்கு ராகுல் அப்பீல்
டெல்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் புத்தாண்டு நாளில் சீனா கொடியேற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீனா விவகாரத்தில் இப்போதாவது பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியா- சீனா இடையே சுமார் 3,500 கி.மீ. வரையறுக்கப்படாத எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. நாட்டின் கிழக்கு லடாக் பகுதிக்கும் சீனாவின் அக்சாய் சின் பகுதிக்கும் இடையே உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் இந்தியா, சீனா வீரர்கள் ரோந்து வருவது வழக்கம். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டி இந்தியா சாலைகளை அமைத்து வருகிறது. இது சீனாவை ஆத்திரமூட்டியது. இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவி இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது.

20 வீரர்கள் வீரமரணம்
கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இரு ராணுவத்தினரிடையே கைகலப்பு மோதல்கள் நிகழ்ந்தன. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா ராணுவ வீரர்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது முதல் இருநாடுகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.

சீண்டும் சீனாவின் வீடியோ
இந்நிலையில் புத்தாண்டு நாளில் சீனா ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவின் கொடியேற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது சீனா. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் வேண்டுகோள்
அதில், கல்வான் பள்ளத்தாக்கில் நமது மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அவர்களே, இப்போதாவது மவுனம் கலையுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல் காந்தி. கடந்த வெள்ளிக்கிழையன்று, அருணாச்சல பிரதேசத்தின் 15 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டியிருப்பதை சுட்டிக் காட்டி மத்திய அரசு தெளிவான, கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டிருந்தார் ராகுல் காந்தி.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications