42 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பி.எப். வட்டியை குறைப்பதா? நாடு திரும்பிய ராகுல் கொந்தளிப்பு
டெல்லி: 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எப். வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎப் தொகைக்கு தரப்படும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டுக்கு 8.1% வட்டி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் இந்த வட்டி விகிதம் 8.5% ஆக இருந்தது. அதற்கு முன்னர் வட்டி விகிதம் 8.65% ஆக இருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் 8.80%; 2013-14-ம் நிதி ஆண்டில் 8.75% என வட்டி விகிதம் இருந்தது.

இந்த வட்டி விகிதம் குறைப்புக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் மோடி பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து மக்களின் வருவாயை குறைக்கின்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறார். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தற்போதைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். நாட்டின் 6.5 கோடி ஊழியர்களின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கை. இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications