Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பரமாத்மா' அனுப்பி வைத்த மோடிதான் கொரோனா காலத்தில்- ராகுல் காந்தி சரமாரி தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் என தம்மை பிரகடனப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடிதான் கொரோனா காலத்தில் பாத்திரங்களை அடிக்கவும் டார்ச் லைட் அடிக்கவும் சொன்னவர் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி திடீரென, தாம் உயிரியல் ரீதியாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப் பிறவி அல்ல. என்னை பூமிக்கு அனுப்பியதே பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்துவதற்காக என்னை கடவுள் பூமிக்கு அனுப்பினார். நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதர்கள் பெற்றிருப்பதைப் போல கிடையாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இந்த ஆற்றலைத் தர முடியும் என கூறியிருந்தார்.

Rahul Gandhi slams PM Narendra Modi on sent by God remark

ராகுல் காந்தி விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகவும் விவாதங்களாகவும் தொடர்ந்து வெடித்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: நரேந்திர மோடி தனது ஜால்ராக்களிடம் பேட்டியில் கூறுகிறார்- நான் உயிரியல் ரீதியாக (பயோலாஜிகளாக) பிறந்தவன் அல்ல. அதாவது, இந்தியாவின் அனைத்து மக்களும், உயிரினங்களும் உயிரியல் சார்ந்தவை, ஆனால் நரேந்திர மோடி உயிரியல் ரீதியானவர் அல்ல என்று.

கொரோனா காலத்தில்.. : மோடி கூறுகிறார்- தன்னை பரமாத்மா அனுப்பினார் என்று. அவருடைய ஜால்ராக்கள் சொல்கிறார்கள் - ஆஹா, வாவ், ஆஹா... எத்தனை அற்புதமான விஷயத்தைச் சொன்னீர்கள் என்று! கொரோனா பெருந்தோற்று காலத்தில் மருத்துவமனை வாசலில் மக்கள் உயிருக்காக போராடிய போது அனைவரையும் தட்டை அடிக்கவும், மொபைலில் டார்ச் அடிக்கச் சொன்னார்.

பரமாத்மா என்ன செய்தார்?: பரமாத்மா எப்படிப்பட்ட மனிதனை அனுப்பினார்? பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி... அதானி மற்றும் அம்பானி கேட்பதை இரண்டு நிமிடங்களில் நிறைவேற்றி வருகிறார் ஆனால் எளிய மக்கள் கேட்பதை துளியும் கண்டுகொள்ள மறுக்கிறார்.

"இந்தியா" கூட்டணி ஆட்சியில்: மோடியும் பாஜகவும் நமது அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும், "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைத்தவுடன் அரசியலமைப்பு பிரமாணத்தை அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+