பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரேப் இன் இந்தியா கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 3 விஷயங்களுக்காக பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

பலாத்கார சம்பவங்களை குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, பலாத்காரங்களின் தலைநகர் இந்தியா என்றும் மேட் இன் இந்தியாவைப் போல ரேப் இன் இந்தியா என்றும் விமர்சித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 Rahul Gandhi urges PM Modi should apologise for Three incidents

லோக்சபாவில் பாஜக பெண் எம்.பி.க்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். இதனையடுத்து உடனடியாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.

அப்போது, பலாத்காரங்களின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது என பிரதமர் மோடி முன்பு பேசியதன் வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டார். மேலும் தமது கருத்து சரிதான் என்றும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறினார்.

அத்துடன் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி 3 விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதில், வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன; இந்திய பொருளாதாரம் நிர்மூலமாகிவிட்டது ஆகியவற்றுக்காகவும் பலாத்காரங்களின் தலைநகர் டெல்லி என பேசியதற்காகவும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ராகுல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+