இலங்கை போலீஸ் திடீர் விசாரணை-வீடு திரும்பிய ராஜீவ் காந்தி கொலையாளிகள் ராபர்ட், முருகன், ஜெயக்குமார்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளான ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று கொழும்பு சென்றடைந்தனர். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை போலீசார் 3 பேரிடமும் திடீரென விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணைக்குப் பின் 3 பேரும் வீடு திரும்பினர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தமிழ்நாட்டில் 33 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தனர் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் . முதலில் தூக்கு தண்டனை கைதிகளாகவும் பின்னர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு சட்டப் போராட்டங்கள், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள், தமிழக மக்களின் போராட்டங்கள், செங்கொடி உள்ளிட்டோரின் தீக்குளிப்பு ஆகியவற்றால் ராஜீவ் கொலையாளிகள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான ராஜீவ் கொலையாளிகளில் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதனால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரி 3 பேரும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் முடிவாக நேற்று 3 பேரும் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை தலைநகர் கொழும்பை 3 பேரும் வந்தடைந்த நிலையில் அங்கு திடீரென போலீசார் 3 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதனால் கொழும்பு விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் உறவினர்களும் விமான நிலையத்திற்கு வந்து அவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications